ஞாயிறு, 2 டிசம்பர், 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!


AUAB தலைவர்களுக்கும்  தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது .  BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு  , ஓய்வூதிய மாற்றம் ,  BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை  AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .
இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன்  விவாதிப்பதிற்கான  வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு  செய்துள்ளது.  மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல்   நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்
பி.அபிமன்யூ, பொதுச்செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக