திங்கள், 3 டிசம்பர், 2018

Monday, 03 December, 2018Read MoreDownload காலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது.

மத்திய அமைச்சரோடு பேச்சு வார்த்தை நடைபெறுவதற்காக 03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை 02.12.2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டம் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தது. இந்த சூழ்நிலையில் AUAB தலைவர்களுக்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும் இடையே இன்று (03.12.2018) அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. AUABயின் கோரிக்கைகளில், BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்குவது, ஓய்வூதிய மாற்றம், BSNL வழங்குகின்ற ஓய்வூதிய பங்களிப்பில் அரசு உத்தரவுகளை அமலாக்குவது மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் ஆகியவற்றை அரசாங்கம் மற்றும் BSNL நிர்வாகம் ஏற்றுக் கொண்டன. அவற்றின் அமலாக்கத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று {03.12.2018) நடைபெற்ற AUAB கூட்டத்தில், அதி முக்கியமான பிரச்சனையான 3வது ஊதிய மாற்றத்தில், அரசிற்கும், BSNL நிர்வாகத்திற்கும் இன்னமும் சற்று கூடுதல் அவகாசம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இவற்றின் அடிப்படையில் AUAB தனது காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அடுத்த தகவல் வரும் வரை ஒத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக