வெள்ளி, 6 டிசம்பர், 2013

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி


கருப்பின புரட்சியாளரும் தென்னாபிரிக்க முன்னாள்,குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்! 



 






தென்னாபிரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா  ஜோகன்னெஸ்பர்க்கில் அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார். நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையின் பெரும்பாலான காலத்தை ராபன் தீவில் சிறிய அறையில் கழித்தார். 1990 இல் அவரதுவிடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. பின்னர் நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார். அவர் ஜனாதிபதி ஆனபின்னர் 1998ம் ஆண்டு அந்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ்,தெலுங்குஇந்திகுஜராத்திஉருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அமைதிக்கான நோபல் பரிசையும் நெல்சன் மண்டேலா பெற்றார்.  தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த மண்டேலா முதலாவது குடியரசுத்தலைவர் பதவி வகித்த போது 1999ல் பதவியை விட்டு விலகினார். பின்னர் அவர் குடியரசுதலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். கடந்த ஜூன் 8ந் தேதி நெல்சன் மண்டேலா நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்துமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தொடர்ந்து அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அவரது மகள் மகஸிவே மண்டேலாநெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். தற்போது அவர் மரணம் அடைந்துவிட்டார் என அந்நாட்டு குடியரசுத்தலைவர்தெரிவித்துள்ளார்.




 மனித மாண்புசுயமரியாதைஅநீதிக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மீது ஈர்ப்பு செலுத்திய ஒரே தலைவராக விளங்கிய மண்டேலா . அவர்களின் மறைவிற்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்க ஈரோடுமாவட்ட சங்கம் தன்  செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்து கொள்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக