JAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JAC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2014

வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்


நாளை 27-11-2014 அன்று நடைபெறும் ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த விளக்கங்களுடன் கூடிய ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றுவருகிறது. வேலைநிறுத்தத்தை நம் மாவட்டத்தில் முழு அளவில் எழுச்சியுடன் நடத்த ஈரோடு மாவட்ட JAC  அறைகூவல் விடுத்துள்ளது.

27-11-14 வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !!

இன்று 25-11-2014  மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதுமில்லை என்ற காரணத்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நாளை நடைபெறும் ! அனைவரும் பங்கேற்போம் ! போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !


BSNL ஊழியர் 27.11.14 இந்தியா முழுவதும் வேலைநிறுத்தம்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிஎஸ்என்எல் 3ஆம் மற்றும் 4ஆம் பிரிவு ஊழியர்களின் 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நவ.27 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்நடைபெறவுள்ளது.இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாகக் கூறி நிர்வாகம் ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாககுறைந்தபட்ச போனசை அளிக்க மறுத்துவிட்டது.மருத்துவ அலவன்ஸ்எல்டிசி வசதிகளையும் நிறுத்திவிட்டது.இப்பொதுத்துறை நஷ்டமடையக் காரணம் ஊழியர்கள் அல்லகிராமப்புற தொலைபேசி சேவையை அளிப்பதற்குபிஎஸ்என்எல் க்கு ஏற்படும் ஆண்டுச் செலவு ரூ.10,000 கோடியாகும்இதனை ஈடுகட்ட ஆண்டுதோறும் ரூ.5000கோடியை 2005 வரை அளித்துவந்த மத்திய அரசு தற்போது அதனை முழுமையாக நிறுத்திவிட்டதுதரைவழிதொலைபேசிபிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகளை விஸ்திரிக்கவும் பராமரிக்கவும்தேவையான உபகரணங்களையும்நிதிஉதவியையும் அளிக்காமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தொடர்ந்து அரசுவஞ்சிக்கிறது.சேவையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களை எச்.யு..டபிள்யு.. என்ற சீனநிறுவனத்திடமிருந்து நவீன கருவிகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கும் அரசுஅத்தகைய கருவிகளைபிஎஸ்என்எல் வாங்குவதற்கு அனுமதி மறுப்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் நிறுவனம்தள்ளாடுகிறது.இச்சூழ்நிலையில் நான்காம்பிரிவு ஊழியர்களது சம்பள தேக்கம் கருணைஅடிப்படையிலானவேலைஎஸ்.எஸ்டி ஊழியர்களுக்கான சலுகைகள்பதவி உயர்வுகள்புதிதாக வேலைக்கு சேர்ந்தோருக்கானசம்பள முரண்பாடு பழைய ஊழியர்களுக்கான மற்றும் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நியாயமானகோரிக்கைகளை தீர்க்கும்படி பிஎஸ்என்எல் தலைவருக்கு 26.05.2014 அன்று கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில்மனு அளிக்கப்பட்டு பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுபின்னணியில் 27.06.2014 அன்று நடந்தபேச்சுவார்த்தையில் சில பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நிர்வாகம்ஒப்புக்கொண்டது.ஆனாலும் இன்றுவரைஅவை அமலாகவில்லை.
ஆகவேகூட்டு நடவடிக்கைக்குழு 27.11.2014 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.அதன்படிநாடு முழுவதும் இவ்வேலை நிறுத்தம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் பணிபுரியும்1,86,000 ஊழியர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.

வியாழன், 30 அக்டோபர், 2014

JAC கூட்ட முடிவுகள்

27.11.2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்- தமிழக JAC முடிவு படிக்க :-Click Here

திங்கள், 8 செப்டம்பர், 2014

கோரிக்கைகள் வெற்றிபெற வேலை நிறுத்தம்

மாநில சங்க சுற்றறிக்கை எண்:167 :- கோரிக்கைகள் வெற்றிபெற வேலை நிறுத்தம்-JAC முடிவு   Read | Download

வியாழன், 31 ஜூலை, 2014

வெள்ளி, 18 ஜூலை, 2014

கோரிக்கை தினம்

e0 photo: spinning star1 spinstar_e0.gifஇன்று (18-07-2014)நடைபெற்ற கூட்டு போராட்ட குழு கூட்ட முடிவாக  வரும் 07-08-2014 அன்று "கோரிக்கை தினமாக" அனுஷ்டித்து மதிய உணவு இடைவேளை நேரத்தில் பேட்ஜ் அணிந்து "ஆர்ப்பாட்டம்" நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது.27-06-2014 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது . அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க JAC மீண்டும்  11-08-2014 அன்று கூடவுள்ளது .

e0 photo: spinning star1 spinstar_e0.gifமாநில சங்க அறிக்கை  <<    READ | DOWNLOAD    >> 

புதன், 2 ஜூலை, 2014

JAC யின் அடுத்த கூட்டம் 17.07.2014

  அதிகாரிகள் அல்லாத நிர்வாகிகள் சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் அடங்கிய JAC யின்  அடுத்த கூட்டம் 17.07.2014 அன்று நடைபெறும். அன்றைய கூட்டத்தில் 27.06.2014 அன்று நிர்வாகத்துடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அம்சங்கள்  சில முக்கியமான பிரச்சினைகள் மீது நிர்வாகம்  கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கம், அத்துடன் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி  பரிசீலிக்கும்