புதன், 20 நவம்பர், 2013

வாழ்த்துக்கள்

பணி ஒய்வுகாலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

1)      தோழர்.  K. தியாகராஜன்  SSS, HEAD Clerk, O/o GMT, BSNL,  ஈரோடு
38 ஆண்டுகள் இலாகவில் பணியாற்றி உள்ளார். பொது மேலாளர் அலுவலக கிளையின் தலைவராகவும்,  மாநில ஊழியர் சேம நல வாரிய உறுப்பினராகவும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். சங்கம் கொடுத்த அனைத்து போராட்டங்களிலும்  பங்கேற்றதுடன் , பிற ஊழியர்களையும் பங்கேற்க வைத்துள்ளார். அலுவலக பணிகளையும் மிகச்சிறப்பாக செய்து அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இவர் கடந்த 31-07-2013 அன்று பணி ஒய்வு பெற்றார்.  அகில இந்திய / மாநில /மாவட்ட / கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
1   2) தோழர். M.சிவானந்தம்  TM, O/o DE EXTERNAL , ஈரோடு
இவர் இலாகாவில் 36 ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். நான்காம் பிரிவு ஊழியராக இலாகாவில் நுழைந்து  , ஒயர்மேன், டெலிகாம் மெக்கானிக் ஆகிய தேர்வில் பதவி உயர்வு பெற்று உள்ளார். இலாகாவில் நுழைந்தது முதல் பணி ஒய்வு பெறுகின்ற வரை தன்னை தோழர்.கே.ஜி.போஸ் அணியில் இணைத்துக்கொண்டு , சங்க வளார்ச்சிக்காகவும் , இடது சாரிகளின் கருத்துக்களாலும்  ஈர்க்கப்பட்டு , அவர்கணின் தியாகத்தை பார்த்து  தன்னையும் அந்த கருத்துக்கு மாற்றிக்கொண்டு  பணியாற்றி உள்ளார். அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். அகில அகில இந்திய / மாநில /மாவட்ட / கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

1)      தோழர். P.M. நல்லாசிவம்  STS (O), O/o DE INTERNAL, ஈரோடு
1978-ல் லைமேன் ஆக இலாகாவில் நுழைந்தார். 09-05-1983 ல் தொலைபேசி இயக்குனராக பதவி உயர்வு பெற்று , ஊட்டி, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் பணிபுரிந்துள்ளார்.  நுழைந்த நாள் முதல் கே.ஜி.போஸ் அணியின்  தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.  அதற்கு முக்கிய காரணாம் அண்ணன், அண்ணி , மைத்துனர்கள் என அவரது முழு குடும்பமே இடது சாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்வர்கள். அவர் கடந்த 31-10-2013 அன்று பணி ஓய்வு பெற்றுள்ளார். அகில அகில இந்திய / மாநில / மாவட்ட / கிளைச்சங்கங்களுக்கு தலா ரூ.500 /- வீதம் நன்கொடை அளித்துள்ளார். அவரின் பணி ஒய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக